செய்திகள்

டிச. 10 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா விளையாட்டுப் போட்டிகள்!

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 10 ஆம் தேதி  தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,350க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள், துப்பாக்கிச்சூடு, வில்வித்தை, கால்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் போட்டி என மொத்தம் 7 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. 

இதுகுறித்து அமைச்சர் அனுராக் தாக்குர்  தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது, “நாட்டில் முதன்முறையாக  கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் மாதம்  நடைபெற உள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுதில்லியில் இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் 3 திடல்களில் மொத்தம் 7 பிரிவுகளில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் திருப்புமுனையாக அமையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள ஐஜி திடல், துக்ளகாபாத் மற்றும் ஜேஎல்என் திடலில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்சௌவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஜொலித்த நட்சத்திர வீரர், வீராங்கனைகளான ஷீடால் தேவி, பாவினா பட்டேல், ஏக்தா பியான், நீரஜ் யாதவ்,   சிங்ராஜ், மணீஷ், சோனல், ராகேஷ் குமார் மற்றும் சரிதா ஆகியோர்  தங்களுடைய சொந்த மாநிலங்கள் தரப்பில் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சக்கரத்தில் புகை: கேரள விரைவு ரயில் 20 நிமிஷம் தாமதம்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: காரைக்குடி பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி முகாம்

இன்றைய நிகழ்ச்சிகள் - மதுரை

பட்டாசு ஆலை விதிகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT