FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

இந்திய கிரிக்கெட் ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஏப்ரல் 2024, 4:12 pm IST
ஹார்திக் பாண்டியா (கோப்புப்படம்)
பகிர்:

இந்திய கிரிக்கெட் ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை டி20 தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்னும் ஒரு சில நாள்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது எனவும், அவர் ஐசிசி நடத்தும் தொடர்களில் தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறார் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இர்ஃபான் பதான் (கோப்புப்படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹார்திக் பாண்டியாவுக்கு இதற்கு முன்பு கொடுத்த முக்கியத்துவத்தை இந்திய கிரிக்கெட் தொடர்ந்து கொடுக்கக்கூடாது என நினைக்கிறேன். ஏனென்றால், நாம் பல ஆண்டுகளாக உலகக் கோப்பையை வெல்லாமல் இருக்கிறோம். அணியின் முதன்மையான ஆல்ரவுண்டர் என்றால் அவர் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால், ஹார்திக் பாண்டியா ஐசிசி நடத்தும் தொடர்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஐபிஎல் தொடர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் தொடருக்குமிடையே நிறைய வித்தியாசம் உள்ளது. தனிநபருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்துங்கள். தனிநபருக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தால், பெரிய அளவிலான தொடர்களை வெல்ல முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments