FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று: ருத்ராங்க்ஷ்/மெஹுலி இணைக்கு தங்கம்

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல்/மெஹுலி கோஷ் இணை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.

7 பிப்ரவரி 2024, 8:52 pm IST
பகிர்:


ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல்/மெஹுலி கோஷ் இணை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். 

இறுதிச்சுற்றில் அந்த இணை 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஷென் யுஃபான்/ஜு மிங்ஷுவாய் கூட்டணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. முன்னதாக தகுதிச்சுற்றில் ருத்ராங்க்ஷ்/மெஹுலி இணை 631.3 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு இந்திய ஜோடியான இளவேனில் வாலறிவன்/அர்ஜுன் பபுதா, 632.3 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தனர். 

ருத்ராங்க்ஷ், மெஹுலி கோஷ் ஏற்கெனவே பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதிபெற்றவர்களாவர். 

Advertisement

Advertisement

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் சீமா/ரிதம் சங்வான் இணை 11-17 என வியத்நாமின் து வின் டிரின்/காங் ஹய் பாம் இணையிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.  

இதனிடையே, ஜூனியர் ஏர் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் இஷா அனில் தக்சேல்/உமாமகேஷ் மத்தினேனி கூட்டணி 17-11 என்ற புள்ளிகளில் சீனாவின் சு ஜிகிங்/பன் போவன் இணையை வீழ்த்தி தங்கத்தை கைப்பற்றியது. மற்றொரு இந்திய ஜோடியான அபினவ் ஷா/அன்வி ரத்தோட் 16-10 என இந்தோனேசியாவின் மசாயு புத்ரி/பஸ்கலிஸ் ஸ்டீவன் கூட்டணியை சாய்த்து வெண்கம் பெற்றனர். 
இத்துடன் இப்போட்டியில் இந்தியர்கள் என்ற பதக்கங்களின் எண்ணிக்கை, 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 10-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments