FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

2 கோல்கள் அடித்த ரொனால்டோ: சௌதி லீக்கில் அல்-நசீர் முன்னேற்றம்!

சௌதி லீக் கால்பந்து தொடரில் ரொனால்டோ 2 கோல்கள் அடித்து அசத்தினார்.

Updated On : 5 ஏப்ரல் 2025, 11:26 am IST
ரொனால்டோ கோல் அடித்த மகிழ்ச்சியில் அல்-நசீர் வீரர்கள். - படங்கள்: எக்ஸ் / அல்-நசீர்
பகிர்:

சௌதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நசீர் அணிக்காக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்து அசத்தினார்.

சௌதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நசீர் தனது 26ஆவது போட்டியில் அல்-ஹிலால் உடன் மோதியது.

இந்தப் போட்டியில் முதல்பாதி கூடுதல் நேரத்தில் அல்-நசீர் அணிக்காக அலி அஜ்ஹாசன் கோல் அடித்தார்.

Advertisement

Advertisement

அடுத்த பாதியில் அல்-ஹிலால் வீரர் அலி அல்புலையாஹி 62ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

அல்-நசீர் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 47, 88 (பெனால்டி) ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் அல்-நசீர் அணி 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சௌதி புரோ லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் அல்-நசீர் 54 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது.

59 சதவிகித பந்தினை அல்-ஹிலால் வைத்திருந்தது. அத்துடன் 81 சதவிகிதம் துல்லியமாக பாஸ் செய்தும் தோல்வியுற்றது.

குறிப்பாக அல்-ஹிலால் இலக்கை நோக்கி பந்தினை 3 முறை மட்டுமே அடித்தனர். ஆனால், அல்-நசீர் இலக்கை நோக்கி 8 முறை பந்தினை அடித்தது குறிப்பிடத்தக்கது.

சௌதி புரோ லீக் புள்ளிப் பட்டியல்

1. அல்-இத்திஹாத் - 25 போட்டிகள் - 61 புள்ளிகள்

2. அல்-ஹிலால் - 26 போட்டிகள் - 57 புள்ளிகள்

3. அல்-நசீர் - 26 போட்டிகள் - 54 புள்ளிகள்

4. அல்-காதீஷியா - 25 போட்டிகள் - 51 புள்ளிகள்

5. அல்-அஹ்லி சௌதி - 25 போட்டிகள் - 48 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments