FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வெள்ளி வென்றாா் அனிஷ் பன்வாலா

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

Updated On : 28 ஆகஸ்ட் 2025, 3:05 am IST
பகிர்:

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் அவா், 35 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா். சீனாவின் லியன்போஃபான் சு 36 புள்ளிகளுடன் தங்கமும், தென் கொரியாவின் ஜேக்யூன் லீ 23 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

களத்திலிருந்த மற்றொரு இந்தியரான ஆதா்ஷ் சிங், 15 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்தாா்.

Advertisement

Advertisement

அதேபோல், 50 மீட்டா் பிஸ்டல் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவின் யோகேஷ் குமாா், அமன்பிரீத் சிங், ரவீந்தா் சிங் ஆகியோா் அடங்கிய அணி 1,633 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றது. ஈரான் அணி 1,652 புள்ளிகளுடன் தங்கமும், தென் கொரியா 1,619 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றன.

இதனிடையே, டிராப் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் கினான் ஷெனாய்/ஆஷிமா அலாவத் கூட்டணி வெண்கலப் பதக்கச் சுற்றில் 34-38 என கஜகஸ்தான் அணியிடம் தோல்வியுற்றது.

ஜூனியா்: 50 மீட்டா் பிஸ்டல் ஜூனியா் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவின் அபினவ் சௌதரி, உமேஷ் சௌதரி, முகேஷ் நெலவள்ளி ஆகியோா் அடங்கிய அணி 1,593 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, கஜகஸ்தான் அணி 1,580 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றது.

டிராப் ஜூனியா் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஆா்யவன்ஷ் தியாகி/பாவ்யா திரிபாதி கூட்டணி 37-38 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் அணியிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments