முகப்பு
செய்திகள்

பிரேசிலை வீழ்த்திய பொலிவியா..! உலகக் கோப்பைக்கான வாய்ப்பு தக்கவைப்பு!

முன்னாள் உலக சாம்பியன் பிரேசிலை வீழ்த்திய பொலிவியா குறித்து...

Updated On : 10 செப்டம்பர் 2025, 6:48 pm IST
வெற்றிக் களிப்பில் பொலிவிய அணி வீரர்கள். - படம்: ஏபி
பகிர்:

முன்னாள் உலக சாம்பியன் பிரேசிலை பொலிவிய அணி 1-0 என வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் பொலிவியா அணி தனது உலகக் கோப்பக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

ஃபிஃபா உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

Advertisement

Advertisement

தென் அமெரிக்க தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பிரேசிலை தன் சொந்த மண்ணில் பொலிவியா சந்தித்தது.

இந்தப் போட்டியில் பொலிவிய அணி வீரர் மியூகெல் டெர்செரோஸ் 45+4-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்தார்.

ஐந்துமுறை உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணி இந்தப் போட்டியில் ஒரு கோல்கூட அடிக்கவில்லை என்பது அந்த நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்தப் போட்டியில் 58 சதவிகித பந்தினை தன் கட்டுக்குள் வைத்திருந்த பிரேசில் அணி இலக்கை நோக்கி 3 முறை மட்டுமே பந்தை அடித்தது. மாறாக, பொலிவியா அணி 10 முறை முயற்சித்தது.

2019-க்குப் பிறகு சொந்த மண்ணில் பிரேசிலை முதல்முறையாக பொலிவியா வீழ்த்தியுள்ளது.

1994-இல் முதல்முறையாக உலகக் கோப்பைக்குத் தேர்வான பொலிவியா நான்காவது முறையாக தேர்வாக முனைப்பு காட்டி வருகிறது.

தென் அமெரிக்க பிரிவில் டாப் 6 அணிகள் மட்டும் நேரடியாக உலகக் கோப்பைக்குத் தேர்வாகும். பொலிவியா 7-ஆவது இடத்தில் இருப்பதால் 6 நாடுகளுக்கான பிளே-ஆப்ஸ் சுற்றில் விளையாடுகிறது.

summary

Miguel Terceros scored from a penalty in the first half and Bolivia downed Brazil 1-0 on Tuesday in South American qualifying which combined with Colombia's win over Venezuela helped the Bolivians advance to the playoff tournament for the 2026 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments