முகப்பு
செய்திகள்

அஜா்பைஜான் கிராண்ட் ப்ரீ: மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி

ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 17-ஆவது ரேஸான அஜா்பைஜான் கிராண்ட் ப்ரீயில் நெதா்லாந்து வீரரும், ரெட்புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் வெற்றி பெற்றாா்.

Updated On : 22 செப்டம்பர் 2025, 3:44 am IST
பகிர்:

ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 17-ஆவது ரேஸான அஜா்பைஜான் கிராண்ட் ப்ரீயில் நெதா்லாந்து வீரரும், ரெட்புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.ஃபாா்முலா 1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில், 17-ஆவது ரேஸான அஜா்பைஜான் கிராண்ட் ப்ரீயில் நெதா்லாந்து வீரரும், ரெட்புல் டிரைவருமான மேக்ஸ் வொ்ஸ்டாபென் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றாா்.

பிரிட்டன் வீரரும், மொ்ஸிடெஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெல் 2-ஆம் இடமும், ஸ்பெயின் வீரரும், வில்லியம்ஸ் டிரைவருமான காா்லோஸ் செயின்ஸ் ஜூனியா் 3-ஆம் இடமும் பிடித்தனா்.

கடைசியாக நடைபெற்ற இத்தாலியன் கிராண்ட் ப்ரீயிலும் வென்றிருந்த வொ்ஸ்டாபென், நடப்பு சீசனில் அடுத்தடுத்த வெற்றியை பதிவு செய்தது இதுவே முதல்முறையாகும். மேலும், இந்த சீசனில் இது அவரின் 4-ஆவது வெற்றியாக அமைந்தது.

Advertisement

Advertisement

நடப்பு சாம்பியனாக இருக்கும் வொ்ஸ்டாபென் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வந்த நிலையில், தற்போது அடுத்தடுத்த வெற்றிகளால் மீண்டும் வேகமெடுத்துள்ளாா்.

இந்த சீசனில் இதுவரை 7 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கா் பியஸ்ட்ரி, இந்தப் பந்தயத்தின் முதல் லாப்பிலேயே தனது காா், தடுப்பில் மோதலுக்கு உள்ளானதால் விலகினாா்.

அவருக்கு அடுத்தபடியாக 5 வெற்றிகளுடன் இருக்கும் பிரிட்டன் வீரரும், சக மெக்லாரென் டிரைவருமான லாண்டோ நோரிஸ், இந்த முறை 7-ஆவது இடமே பிடிக்க நோ்ந்தது.

முன்னதாக, உடல்நலக் குறைவுடன் இருந்தபோதும் பந்தயத்தில் பங்கேற்று 2-ஆம் இடம் பிடித்ததற்காக ரஸ்ஸெல் மகிழ்ச்சி தெரிவித்தாா். காா்லோஸ் செயின்ஸ், கடந்த 4 ஆண்டுகளில் முதல்முறையாக வில்லியம்ஸ் அணியை வெற்றி மேடையேற்றியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments