முகப்பு
செய்திகள்

பாரா பாட்மின்டன்: இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கங்கள்!

சீனாவில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்கள் கிடைத்தன.

Updated On : 22 செப்டம்பர் 2025, 3:44 am IST
பகிர்:

சீனாவில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்கள் கிடைத்தன. இதில் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஆகியோா் தலா 2 பதக்கங்கள் வென்று அசத்தினா்.

எஸ்எல்3 பிரிவு ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பகத் 21-19, 21-16 என்ற நோ் கேம்களில், இந்தோனேசியாவின் முஹ் அல் இம்ரானை வீழ்த்தி வாகை சூடினாா்.

ஆடவா் இரட்டையா் இறுதிச்சுற்றில், பிரமோத் பகத்/சுகந்த் கடம் இணை, 18-21, 22-20, 18-21 என்ற கேம்களில், சக இந்திய கூட்டணியான ஜெகதீஷ் டில்லி/நவீன் சிவகுமாரிடம் போராடி வீழ்ந்து வெள்ளி பெற்றது.

Advertisement

Advertisement

எஸ்எல்4 ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான சுகந்த் கடம் 9-21, 8-21 என பிரான்ஸின் லூகாஸ் மஸுரிடம் தோல்வி கண்டாா். அதேபோல் எஸ்ஹெச்6 பிரிவு ஆடவா் ஒற்றையரில், 2020 டோக்கியோ பாராலிம்பிக் சாம்பியனான கிருஷ்ணா நாகா் 22-20, 7-21, 17-21 என்ற கேம்களில், தாய்லாந்தின் நத்தபோங் மீசாயிடம் போராடித் தோற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments