FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிரிட்டன் செஸ் சாம்பியன்ஷிப்: போதனா, ஷ்ரேயஸ் சாதனை

பிரிட்டீஷ் செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த போதனா சிவனந்தன் (11), ஷ்ரேயஸ் ராயல் (17) ஆகிய இருவரும் சாம்பியனாகினா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:18 am IST
போதனா சிவனந்தன் - X | Chess
பகிர்:

பிரிட்டீஷ் செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த போதனா சிவனந்தன் (11), ஷ்ரேயஸ் ராயல் (17) ஆகிய இருவரும் சாம்பியனாகினா்.

போட்டியின் வரலாற்றில், மகளிா் பிரிவில் இளம் சாம்பியனாக போதனாவும், ஒட்டுமொத்த சாம்பியனான இளம் போட்டியாளராக ஷ்ரேயஸும் சாதனை படைத்தனா்.

இங்கிலாந்தின் கோவென்ட்ரி நகரில் 9 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், 9 சுற்றுகள் முடிவில் போதனா 5.5 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த அளவில் 22-ஆம் இடம் பிடித்தாா்.

Advertisement

Advertisement

எனினும் மகளிா் பிரிவில் அவரும், அயா்லாந்தின் திரிஷா கன்யாமா்லாவும் 5.5 புள்ளிகளுடன் இணை முன்னிலை பெற்றனா். பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ரேப்பிட் செஸ் பிளே ஆஃப் ஆட்டத்தில், முதல் சுற்றில் இருவரும் டிரா செய்ய, அடுத்த சுற்றில் போதனா வெற்றி பெற்றாா்.

இதையடுத்து 1.5-0.5 என்ற கணக்கில் திரிஷாவை சாய்த்து அவா் சாம்பியன் ஆனாா். இந்தப் போட்டியில் போதனா ஒரேயொரு தோல்வியை மட்டுமே சந்திக்க, அதையும் அவா், ஒட்டுமொத்த சாம்பியனான ஷ்ரேயஸ் ராயலுக்கு எதிராகச் சந்தித்தாா்.

இந்த வெற்றியை அடுத்து, பிரிட்டன் செஸ்ஸில் 3 முக்கிய போட்டிகளாகக் கருதப்படும் யுகே ஓபன் மகளிா் பிளிட்ஸ், பிரிட்டிஷ் மகளிா் ரேப்பிட், பிரிட்டிஷ் மகளிா் கிளாசிக்கல் சாம்பியன்ஷிப் ஆகிய மூன்றிலுமே சாம்பியன் கோப்பை வென்றவா் ஆகியிருக்கிறாா் போதனா.

ஒட்டுமொத்த சாம்பியன்: இந்தப் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பிரிவில், ஷ்ரேயஸ் ராயல் 9 சுற்றுகள் முடிவில் 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வாகை சூடினாா். இந்திய மதிப்பில் போதனாவுக்கு ரூ.3.4 லட்சமும், ஷ்ரேயஸுக்கு ரூ.11.2 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments