FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஹாக்கி உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..! அரையிறுதிக்கான வாய்ப்பு தக்கவைப்பு!

ஹாக்கி உலகக் கோப்பையின் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா குறித்து...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 8:31 pm IST
கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய அணியினர். - படம்: ஏபி
பகிர்:

ஹாக்கி உலகக் கோப்பையின் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை உறுதி செய்தது.

ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகள் ஆக.15 முதல் ஆக.30 வரை நடைபெற இருக்கின்றன.

முதல் போட்டியில் வென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோல்வியுற்று அதிர்ச்சி அளித்தது. மூன்றாவது போட்டியில் கட்டாய வெற்றி அல்லது டிரா என்ற நிலையில் பாகிஸ்தானுடன் இன்று மாலை 7.30 மணிக்கு மோதியது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் இந்திய அணி 5-3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்கள் (5’, 21’), அபிஷேக் சிங் இரண்டு கோல்கள் ( 11’, 24’) ஹார்திக் சிங் (35’) ஒரு கோல் அடித்து அசத்தினார்கள்.

இந்த வெற்றியுடன் குரூப் டி பிரிவில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

இந்தக் குரூப்பில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளிலும் வென்று 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான், வேல்ஸ் அணிகள் மூன்றாவது, நான்காவது இடத்தைப் பிடித்தன.

summary

The Indian men's hockey team beats arch-rivals Pakistan 5-3 in its final pool match of the World Cup in Amstelveen, Netherlands.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments