FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒலிம்பிக்ஸின் பாதி போட்டிகளில் இந்தியர்கள் கலந்துகொள்வதே இல்லை: பிரதமர் மோடி

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதாவது...

பிரதமர் மோடி (கோப்புப் படம்) - PTI
பகிர்:

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, “பாதி ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியர்களாகிய நாம் பங்கேற்பதே இல்லை” என தனது ஆதங்கத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

கேலோ இந்தியாவின் சார்பாக காணொலி வாயிலாக பல்லாயிரக்கனக்கான விளையாட்டு வீரர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசிவருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் தொடரில் இந்தியா 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் முடித்தது. அதில் 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

Advertisement

Advertisement

விளையாட்டு போட்டிகளில் மிகவும் உயர்வான ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியா சுமாரான செயல்பாடுகளே வழங்கி வருகிறது. கடைசியாக 2024ல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியாவின் சர்பாக 6 பதக்கங்களுடன் 75ஆவது இடத்தைப் பிடித்தது.

அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2028ல் அமெரிக்காவில் ஜூலை 14 முதல் ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி கேலோ இந்தியாவில் காணொலி வாயிலாக மோடி பேசியிருப்பதாவது:

ஒலிம்பிக்ஸில் பல வகையான போட்டிகள் இருக்கின்றன. அதில் பாதி போட்டிகளில்கூட இந்திய அணியினர் பங்கேற்பதில்லை. பதக்கப் பட்டியலில் வருவதற்குக் கூட நாம் அதிக போட்டிகளில் பங்கேற்பதில்லை. பல ஆண்டுகளாக இதேபோல தொடர்கதையாக இருக்கிறது.

உலகில் உள்ள மற்ற நாடுகள் நாம் பங்கேற்காத போட்டிகளில் பல பதக்கங்களை வெல்கின்றன. பதக்க எண்ணிக்கை உயர்த்த மற்ற போட்டிகளிலும் நாம் நமது திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

சுதந்திர நாள் விழாவில், “விளையாட்டு போட்டிகள் என்பது வெறுமனே பதக்கங்களை வெல்வது மட்டுமல்ல; அதுவும் இந்தியாவின் வளர்ச்சிதான்” என மோடி பேசியிருந்தார்.

summary

We don't even participate in half of Olympic sports; need to improve: PM Modi 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments