கூடுதல் நேரத்தில் 2 கோல்கள்: த்ரில் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது ஆர்ஜென்டீனா!
கால்பந்து உலகக் கோப்பை காலிறுதியில் வென்ற ஆர்ஜென்டீனா குறித்து...
கால்பந்து உலகக் கோப்பை காலிறுதியில் ஆர்ஜென்டீனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து - ஆர்ஜென்டீனா ஜூலை 16ஆம் நாள் மோதவிருக்கின்றன. இந்திய நேரப்படி அந்தப் போட்டி புதன்கிழமை இரவு 12.30 மணிக்கு நடைபெறும்.
அமெரிக்காவில் கான்சாஸ் சிட்டி திடலில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா - ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 10ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி அடித்த கார்னர் கிக்கில் மெக் அலிஸ்டர் தனது தலையால் கோல் அடித்தார்.
Advertisement
Advertisement
பின்னர், இரண்டாம் பாதியில் ஸ்விட்சர்லாந்தின் டான் டோயே 67ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். பின்னர் ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.
கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வாரெஸ் 112ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் இது அவரது முதல் கோல் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், 120+1ஆவது நிமிஷத்தில் லொடாரோ மார்டினெஸ் மற்றுமொரு கோல் அடித்து 3-1 என ஆர்ஜென்டீனா வெற்றி பெற உதவினார்கள்.
ஒரு கட்டத்தில் ஸ்விட்சர்லாந்து அணி ஆர்ஜென்டீனாவை விட அதிகமாக பந்தை தன்வசம் வைத்திருந்தார்கள். பின்னர், கடைசி நேரத்தில் ஆர்ஜென்டீன அணியினர் தங்கள்வசம் அதிகமாக வைத்து ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.
Two goals in extra time: Argentina advances to the semi-finals!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.