மியாமி ஓபனில் பட்டம்..! சன்ஷைன் டபுள் சாதனையும் படைத்த சின்னர்!
மியாமி ஓபன் ஆடவர் பிரிவில் பட்டம் வென்ற யானிக் சின்னர் குறித்து...
மியாமி ஓபன் ஆடவர் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னர் 6-4, 6-4 என்ற செட்களில் வென்று கோப்பையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலமாக ’சன்ஷைன் டபுள்’ என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார்.
முன்னதாக, மகளிர் பிரிவிலும் இதேபோல முதல்முறையாக அரினா சபலென்கா ’சன்ஷைன் டபுள்’ என்ற சாதனையைப் படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
மியாமி ஓபன் இறுதிப் போட்டியில் செக் நாட்டின் ஜிரி லெஹெக்கா மற்றும் இத்தாலி நாட்டின் யானிக் சின்னரும் மோதினார்கள். இந்தப் போட்டியில் சின்னர் 6-4, 6-4 என வெற்றியடைந்தார்.
கடைசியாக சன்ஷைன் டபுள் ஆடவர் பிரிவில் 2017ல் ரோஜர் ஃபெடரர் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு தொடரிலும் ஒரு செட் கூட இழக்காமல் இந்த சாதனையை செய்துள்ள ஒரே ஆடவராக சின்னர் வரலாறு படைத்துள்ளார்.
சின்னருக்கு இது இரண்டாவது மியாமி ஓபன் பட்டமென்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2016ஆம் ஆண்டு ஆடவர், மகளிர் பிரிவில் நோவக் ஜோகோவிச், விக்டோரியா அஜரென்கா சன்ஷைன் டபுள் வென்றிருந்தார்கள். தற்போது இந்தாண்டு சின்னர், சபலென்கா வென்றுள்ளார்கள்.