முகப்பு
செய்திகள்

நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி இறுதிக்கு முன்னேற்றம்..! பயர்ன் மியூனிக் வெளியேற்றம்!

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் வென்ற பிஎஸ்ஜி அணி குறித்து...

வெற்றிக் களிப்பில் பிஎஸ்ஜி அணி வீரர்கள். - படம்: ஏபி
பகிர்:

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

முதல்கட்ட அரையிறுதியில் பிஎஸ்ஜி 4-5 என முன்னிலை வகித்தது. இரண்டாம் கட்ட ஆட்டத்தில் 1-1 என சமநிலையில் முடிந்தது. ஒட்டுமொத்தமாக 5-6 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பிஎஸ்ஜி வென்றது.

இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பிஎஸ்ஜி அணியினர் 3ஆவது நிமிஷத்திலேயே கோல் அடித்தனர். கூடுதல் நேரத்தில் 90+4ஆவது நிமிஷத்தில் ஹாரி கேன் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் பெனால்டி கொடுக்காததால் பயர்ன் மியூனிக் அணியினர் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு அணியினருக்குமே 3 மஞ்சள் அட்டைகள் கொடுக்கப்பட்டன.

கடந்த சீசனில் முதல்முறையாக கோப்பை வென்ற பிஎஸ்ஜி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் முன்னேறி இருக்கிறது. ஆர்செனல் அணியுடன் மே.30 ஆம் தேதி மோதுகிறது.

summary

Champions League: PSG beat Bayern 6-5 on aggregate to reach final against Arsenal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments