சுற்றுச்சுழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தனியார் மருத்துவமனையில் அனுமதி
தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் இரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் இரத்த அழுத்தம் காரணமாக தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 8 மணிக்கு ஈரோடு பேருந்து நிலையம் அருகே அரசு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து திண்டல், பெருந்துரை ஆகிய இடங்களில் அரசு நிகழ்ச்சியை முடித்துவிட்டு பவானி அருகே உள்ள ஆப்பக்கூடலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்றுக் கொண்டிருந்தார். செல்லும் வழியில் உடல்நிலை சற்று மோசமானதால் அவருடைய உதவியாளரிடம் தெரிவித்தார். அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமானதால் உடல் வேர்த்து படபடப்பு ஏற்பட்டது.
பின்னர் உதவியாளர்கள் விரைந்து ஆப்பக்கூடலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவருக்கு அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸில் மருத்துவர் உதவியோடு ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சில மணி நேரத்திற்கு பின்னர் உடல்நிலை சற்று தேறியதும், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
Advertisement
Advertisement
இதை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.வி ராமலிங்கம், ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், எம்.பி செல்வகுமார சின்னய்யன் உள்பட 100-க்கும் மேற்பட்ட அ.தி.முக.,வினர் மருத்துவமனையில் குவிந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.