தேர்தல் விதிமுறைகளால் மாநகராட்சி பூங்கா கண்காட்சி ரத்து!
தேர்தல் நடத்தை விதிமுறைகளால், மாநகராட்சி பூங்காவில் நடைபெற உள்ள கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளால், மாநகராட்சி பூங்காவில் நடைபெற உள்ள கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் வீட்டுத் தோட்டம், மொட்டை மாடி, பால்கனி தோட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், தென்னை குலைகள் கண்காட்சி தியாகராய நடேசன் பூங்காவில் நடத்தப்பட இருந்தது.
இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆகவே, மார்ச் 5, 6 ஆகிய 2 நாள்களில் நடக்க இருந்த கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளன என மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.