மதுராந்தகத்தில் வாடகை பாக்கி: தலைமை அஞ்சலகப் பொருட்கள் ஜப்தி
மதுராந்தகம் அருகே இயங்கி வந்த தலைமை அஞ்சலகத்தின் பொருட்கள், நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்யப்பட்டன.
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள தலைமை அஞ்சலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டடத்துக்கு சரியாக வாடகை தரவில்லை என்று கட்டட உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி அஞ்சலகத்தில் இருந்த அனைத்து பொருட்களும் இன்று ஜப்தி செய்யப்பட்டன.
இதனால் தபால் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் செய்வதறியாது வாசலில் காத்திருந்தனர்.