FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம்: டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குற்றச்சாட்டு

டிடிவி தினகரனுக்கு எதிரான தீர்மானம் ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Updated On : 10 ஆகஸ்ட் 2017, 1:51 pm IST
பகிர்:

டிடிவி தினகரனுக்கு எதிரான தீர்மானம் ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம் என்று அவரது ஆதரவாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

அதிமுக துணைப் பொது செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில்,
சசிகலா வேண்டும், டிடிவி தினகரன் வேண்டாம் என்பதெல்லாம் ஈபிஎஸ் அணியின் திட்டமிட்ட நாடகம். சசிகலாவின் முடிவால் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு ஆட்சி காப்பாற்றப்பட்டது. 

Advertisement

Advertisement

அதிமுகவில் நிரந்தரமானவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய செயலாளர்கள்தான்.  ஊழல் ஆட்சி எனக் கூறிய ஓபிஎஸ் அணியுடன் ஈபிஎஸ் அணி சேரப் போகிறதா? எனக் கேள்வி எழுப்பிய அவர் பழனிசாமி தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments