பேராசிரியை நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
பேராசிரியை நிர்மலா தேவியின் நீதிமன்ற காவலை மேலும் நீட்டித்து சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவியின் நீதிமன்ற காவலை மேலும் நீட்டித்து சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியது தொடர்பான வழக்கில் தம்மை ஜாமீனில் விடக் கோரி, நிர்மலா தேவி ஏழு முறை மனு தாக்கல் செய்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அவற்றை தள்ளுபடி செய்தது. இவர் மீது சிபிசிஐடி போலீஸார், குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட முதல்கட்ட குற்றப்பத்திரிக்கையை கடந்த சில நாள்களுக்கு முன் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நிர்மலா தேவியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரை சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் இன்று மீண்டும் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி அவரை ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
இதேபோல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாக மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்ற காவலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.