FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வருமானவரி கணக்குத் தாக்கல்: இன்று கடைசி

மாத சம்பளம் பெறுவோர் உள்பட தணிக்கைக்கு உட்படாத வகையைச் சேர்ந்தவர்கள் கடந்த நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை  கடைசி நாளாகும்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

சென்னை: மாத சம்பளம் பெறுவோர் உள்பட தணிக்கைக்கு உட்படாத வகையைச் சேர்ந்தவர்கள் கடந்த நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை  கடைசி நாளாகும்.
கேரளத்துக்கு நீட்டிப்பு: மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்தோர்
கடந்த நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 15-ஆம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளதாரர்கள் உள்ளிட்டோர் ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்கை ஜூலை 31-க்குள் தாக்கல் செய்ய கெடு நிர்ணயிக்கப்படும். வருமான வரிப் படிவங்கள் குறித்த அறிவிப்பில் ஏற்பட்ட தாமதம், வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) குறித்த தகவலை இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், கடந்த நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments