நிர்மலா தேவி விவகாரம்: முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
பேராசிரியை நிர்மாலா தேவி விவகாரத்தில் கைதான முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பேராசிரியை நிர்மாலா தேவி விவகாரத்தில் கைதான முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், உதவிப்பேராசிரியர் முருகன் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் மீது பாலியல் குற்றத்துக்கு தூண்டுதல், குற்றம் செய்ய முயற்சி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இந்நிலையில் உதவிப்பேராசிரியர் முருகன் ஜாமீன் கோரி திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணையை வரும் 29ஆம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.