மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,516 கன அடியாகச் சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 9,516 கன அடியாகச் சரிந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 9,516 கன அடியாகச் சரிந்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்த காரணத்தால், கபினிக்கு வரும் நீர்வரத்து சரிந்தது. இதனால் அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கடந்த மூன்று நாள்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.
திங்கள்கிழமை காலை 13,696 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 9,516 கன அடியாகச் சரிந்தது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.82 அடியாக இருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர் இருப்பு 21.67 டி.எம்.சி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.