ஹைதராபாத் - திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
ஹைதராபாத் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது.
ஹைதராபாத் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது.
ஹைதராபாத் - திருவனந்தபுரம் இடையே காட்பாடி வழியாக விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படவுள்ளது. ஹைதராபாதில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் ஜூலை 3 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி வரையிலும், திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் ஜூலை 5 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 -ஆம் தேதி வரையிலும் இப்பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.