தன்னை நிரூபிக்க முதல்வர் கடலிலும், நெருப்பிலும் இறங்குவார்: ராஜேந்திர பாலாஜி
கோடநாடு விவகாரத்தில் தன்னை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி கடலிலும், நெருப்பிலும் இறங்குவார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை: கோடநாடு விவகாரத்தில் தன்னை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி கடலிலும், நெருப்பிலும் இறங்குவார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் மர்ம மரணங்கள் விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனால் அதனை முதல்வர் பழனிசாமி மறுத்து வருகிறார்.
இந்நிலையில் கோடநாடு விவகாரத்தில் தன்னை நிரூபிக்க முதல்வர் பழனிசாமி கடலிலும், நெருப்பிலும் இறங்குவார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக சென்னையில் அவர் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது
அதிமுகவின் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது. பிரதமர் மோடியின் ஆட்சியில் நிறையும் இருக்கிறது, குறையும் இருக்கிறது, ஆனாலும் அவர் மீது எந்த ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.
தொடர்ந்து தன மீது அவதூறுகள் கூறப்பட்டு வரும் கோடநாடு விவகாரத்தில் தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க, முதல்வர் பழனிசாமி கடலிலும், நெருப்பிலும் கூட இறங்குவார்.
இவவறு அவர் தெரிவித்தார்.