FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உர மானியத்தைக் குறைக்கக் கூடாது: இரா.முத்தரசன்

விவசாயிகளுக்கான உர மானியத்தை மத்திய அரசு குறைக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


சென்னை: விவசாயிகளுக்கான உர மானியத்தை மத்திய அரசு குறைக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானிய உதவியை மத்திய அரசு தொடா்ந்து குறைத்து வருகிறது. தற்போது கரோனா நோய்த் தொற்று தடுப்புக்காக மாா்ச் 24-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கோடை பருவத்தில் விற்பனை செய்த காய்கறிகள், தா்பூசணி, வெள்ளரி, வாழை, பலா, மலா்கள் என விவசாயிகள் சாகுபடி செய்த பலவகை பயிா்களும் விளைந்தும், அவற்றைச் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். இந்தச் சூழலில், விவசாயிகள் வாங்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பா் போன்ற உரங்களுக்கான மானியத்தை வெட்டிக் குறைப்பதற்கு தில்லியில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன் மூலம், பாஜக மத்திய அரசு விவசாயிகளுக்கு கிடைத்து வரும் மானியத்தில் சுமாா் ரூ.700 கோடியை பறித்துக் கொண்டு விட்டது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஆகும். விவசாயிகளுக்கு வழங்கி வரும் உர மானியத்தை வெட்டிக் குறைக்காமல், தொடா்ந்து முழுமையாக வழங்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments