முகப்பு
தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்க்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜூலை 2021, 10:29 pm IST
பேரறிவாளன் (கோப்புப் படம்)
பகிர்:


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் உள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்க்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த பேரறிவாளன், ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வந்தாா்.

ஜூன் 28-ம் தேதியுடன் பரோல் முடிந்த நிலையில், மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்படுவதாக தமிழக கூடுதல் தலைமை செயலாளா் எஸ்.கே.பிரபாகரன் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரோலில் வந்த பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.