காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள படப்பை.மனோகனுக்கு அதற்கான சான்றிதழை வழங்கும் ஆட்சியர் மா.ஆர்த்தி. 
தமிழ்நாடு

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்வு

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக படப்பை.மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

DIN


காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக படப்பை.மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு திமுகவை சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் 11 பேரும் இம்மாதம் 20 ஆம் தேதி உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழு தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. 

இத்தேர்தலில் மாவட்ட ஊராட்சி 1 ஆவது வார்டு உறுப்பினர் ஆக தேர்வு செய்யப்பட்டிருந்த படப்பை மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவித்தார். 

ஆட்சியரின் அறிவிப்பைத் தொடர்ந்து படப்பை மனோகரன் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிகாரிகள் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட படப்பை மனோகரனுக்கு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டு மலர் மாலைகள், சால்வைகள் அணிவித்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT