FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சட்டப்பேரவைகளில் தமிழகம் முதன்மையானது: ஆளுநர்

நாட்டில் உள்ள சட்டப்பேரவைகளில் தமிழகம் முதன்மையானது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2021, 5:51 pm IST
சட்டப்பேரவை உரையின்போது பன்வாரிலால் புரோஹித்
பகிர்:

நாட்டில் உள்ள சட்டப்பேரவைகளில் தமிழகம் முதன்மையானது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி திருவுருவப் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

பின்னர் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்தியாவில் உள்ள சட்டப்பேரவைகளில் தமிழகம் முதன்மையானது என்று கூறினார். 

Advertisement

Advertisement

அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தகுந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மண்ணின் மைந்தனின் படத்தை சட்டப்பேரவையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

70 ஆண்டுகால அரசியல் வாழ்வில் அனைத்து அரசியல்வாதிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் கருணாநிதி.

பல்வேறு துறைகளில் தனித்துவம் மிக்க அறிவுடன் திகழ்ந்தவர் அவர். தீண்டாமையை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். வீடுகள் கட்டிக்கொடுத்து சமத்துவபுரத்தை உருவாக்கினார்.

குடிசைகளுக்கு பதிலாக குடியிருப்புகள் கட்டிக்கொடுத்தார். இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முடன்னிலை இடம் வகிக்கிறது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments