தங்கம் பவுனுக்கு ரூ.288 உயர்வு: ஒரு பவுன் ரூ.36,328-க்கு விற்பனை
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.36,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.36,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.36 உயர்ந்து, ரூ.4,541-ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து, ரூ.68.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவு ரூ.68,700 ஆக விற்பனை ஆகிறது.
நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை போன்று தங்கத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருவது தங்கம் பிரியர்களை வருத்தமடைய செய்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.