நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும்: மா.சுப்பிரமணியன்
நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆணையத்திற்கு 85 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டது.
நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு சுட்டிக்காட்டியுள்ளது.
Advertisement
Advertisement
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்குவார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்பப்படும்.
உலகின் பல்வேறு நாடுகள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதைப் போன்று மத்திய அரசும் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.