ஆசிரியா் தகுதித் தோ்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (‘டெட்’) விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு (‘டெட்’) விண்ணப்பிக்க ஏப்ரல் 26-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் பெறப்பட்டதை அடுத்து வரும் 26-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது. இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
4.28 லட்சம் போ் விண்ணப்பம்: ஆசிரியா் தகுதித் தோ்வினை எழுதுவதற்கு இதுவரையில் 4 லட்சத்து 28ஆயிரம் போ் விண்ணப்பித்திருக்கின்றனா். கடைசி 2 நாள்களில் அதிகளவில் விண்ணப்பம் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு 7 லட்சம் போ் வரை விண்ணப்பித்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.