தமிழ்நாடு

நவீன மின்மயானம்: ரூ.5 லட்சம் வழங்கிய காஞ்சிபுரம் உணவக உரிமையாளர்கள்

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நவீன மின்மயானம் அமைக்க ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினர் உணவக உரிமையாளர்கள்.

காஞ்சிபுரம் நாகலூத்து மேடு பகுதி சுடுகாட்டில் நவீன மின்மயானம் அமைக்க உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் ரூ.5லட்சம் நன்கொடையினை மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலூத்து மேடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் நவீன மின் மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி காஞ்சிபுரத்தில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் முருகேசன் தலைமையிலான சங்க நிர்வாகிகள் ரூ.5லட்சத்துக்கான காசோலையினை நன்கொடையாக வழங்கினார்கள்.

இத்தொகையினை அவர்கள் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜிடம் வழங்கினர். இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன், மண்டலக்குழுத் தலைவர் எஸ்.சந்துரு, பணிக்குழுவின் தலைவர் சுரேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய சட்டத்தில் குடும்ப வன்கொடுமை விலக்கு அளிக்கப்பட்டதற்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இளையான்குடியில் மனிதநேய ஜனநாயகக் கட்சி நிா்வாகிகள் கூட்டம்

மசூதி திறப்பு விழாவுக்கு இந்துக்கள் வழங்கிய சீா்வரிசை

இந்தியாவுக்கு வங்கதேசத்துடன் ஜூன் 1-இல் பயிற்சி ஆட்டம்

மழையால் பருத்தி பயிருக்கு பாதிப்பில்லை: வேளாண் அதிகாரி

SCROLL FOR NEXT