தமிழ்நாடு

கோவை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

DIN

கோவையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருக்கல்யாண வைபவம் விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். 

கோவை ராம் நகர் பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 63 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற இக்கோயிலின் 40 ஆம் ஆண்டு சித்திரை உற்சவ திருக்கல்யாண வைபவ விழா கோவிலின் செயல் அறங்காவலர் சண்முகசுந்தரம் தலைமையில் வசந்த குமார சிவாச்சாரியார் மந்திரம் முழங்க ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ முத்துமாரியம்மன்

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.

மேலும், வருகிற செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மகா திருக்கல்யாணம், அம்மன் அழைத்தல், சிம்மவாகனம் புறப்பாடு, மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராடல், அபிஷேக பூஜை உள்ளிட்டவை நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT