தமிழ்நாடு

'அவரவர் விரும்பிய மத வழிபாடு செய்ய உரிமை உண்டு': உயர் நீதிமன்றம் அதிரடி!

அவரவர் விரும்பிய மத வழிபாடு செய்துகொள்ள அவரவருக்கு உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது  என்று உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.

DIN

அவரவர் விரும்பிய மத வழிபாடு செய்துகொள்ள அவரவருக்கு உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது  என்று உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.


பெரியார் பிறந்தநாளன்று ஸ்ரீரங்கத்தில் மனுதர்ம தேவ இதிகாசத்தை எரித்து போராட்டம் நடத்த தடை கோரிய வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ஒரு மதத்தினரை, வழிபாட்டு முறைகளை, மத நம்பிக்கைகளை அவமதிக்கும் விதமாக போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், போராட்டங்கள் நடத்த அரசு தரப்பில் எந்த அனுமதியும் அளிக்கவில்லை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோயில் வழிபாடு மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் அதிகாரம் கட்சியினரின் போராட்ட அறிவிப்பை எதிர்த்து ரங்கராஜ் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT