FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உடுமலை கௌசல்யாவின் சலூன் கடையை திறந்த பிரபல நடிகை! 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், அவரது மனைவி கெளசல்யா மீது கடந்த 2016 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் சங்கர் பலியானார். 

Updated On : 25 செப்டம்பர் 2022, 3:20 pm IST
பகிர்:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர், அவரது மனைவி கெளசல்யா மீது கடந்த 2016 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் சங்கர் பலியானார். 

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி எம். மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், இணையேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு கோவை வெள்ளலூரை சேர்ந்த நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியை கோவையில் 2018 டிசம்பரில் மறுமணம் செய்து கொண்டார். 

Advertisement

Advertisement

இதற்கிடையில், அவர் தீவிர சாதி எதிர்ப்பு ஆர்வலராக மாறினார் மற்றும் பல்வேறு இயக்கங்களுடன் பணியாற்றினார். அவளுக்கு மத்திய அரசு வேலை கிடைத்தது, பலர் கெளசல்யாவை  வேலையைத் தொடரச் சொன்னார்கள், அது அவளுடைய வாழ்க்கைக்கு பாதுகாப்பைக் கொடுக்கும். ஆனால், அரசியல் ரீதியாக தன்னை வெளிப்படுத்த முடியாமல், சமகால அரசியலைப் பற்றிக் கருத்துக் கூறக்கூட இடமில்லாமல், வேலையைத் திணறடித்து, வேலையை விட்டு விலகினார். இன்று கோவை வெள்ளலூரில் சலூன் தொடங்கினார். 10 கிமீ சுற்றளவில் வேறு சலூன் இல்லை, மேலும் பல பெண்களை, குறிப்பாக பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களை வேலைக்கு அமர்த்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

 பிரபல மலையாள நடிகை பார்வதி திறப்பு விழாவிற்கு வருகை புரிந்து திறந்து வைத்தார். இந்த கடைத் திறப்புக்கு நடிகர் சத்யராஜ் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments