தமிழகத்திற்கான ரூ. 9, 602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு
தமிழகத்திற்கான ரூ. 9,602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதித்துறை செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது.
தமிழகத்திற்கான ரூ. 9,602 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய நிதித்துறை செவ்வாய்க்கிழமை விடுவித்துள்ளது.
மே 31, 2022 வரை மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகையும் விடுவிக்கப்பட்டுள்ளது. 21 மாவட்டங்களுக்கு மொத்தம் ரூ. 86,912 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில், ஜனவரி 2022 வரை கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 47,617 கோடியும், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி தொகையான 21,322 கோடியும் அடங்கும்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லாத கட்சியாக மாறும் பாஜக
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்திற்கு ரூ. 14,145 கோடி, தமிழகத்திற்கு ரூ. 9,602 கோடி, உத்தரப் பிரதேசத்திற்கு ரூ. 8,874 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.