அடையாளம் தெரியாத வாகனம் மோதி தீயணைப்பு வீரர் பலி!
மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சிக்கிய உயிர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் அடுத்த 8 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தீயணைப்பு வீரர்க
மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சிக்கிய உயிர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் அடுத்த 8 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தீயணைப்பு வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை சிவந்தாம்பட்டி பிரிவு அருகே புதன்கிழமை மாலை மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். கார்களில் சிக்கியிருந்த அவர்களை மீட்கும் பணியில் துவரங்குறிச்சி தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள் முழுமையாக ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
Advertisement
இதில் பணியாற்றி முன்னணி தீயணைப்பாளர் கிருஷ்ணகுமார், நள்ளிரவு நிலையத்தில் பணியில் இருந்தவர் உணவு அருந்த சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் நிலையம் திரும்பாதவரை சக வீரர்கள் தேடிச் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் நெடுஞ்சாலை ஓரத்திலிருந்து கிருஷ்ணகுமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் உடல் கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய உயிர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட வீரர் அடுத்த 8 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.