சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக கட்டடம் திறப்பு
சென்னை நந்தனத்தில் 3.90 லட்சம் சதுர அடியில் ரூ.320 கோடியில் கட்டப்பட்ட மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக கட்டடம் திறக்கப்பட்டடு உள்ளது.
சென்னை நந்தனத்தில் 3.90 லட்சம் சதுர அடியில் ரூ.320 கோடியில் கட்டப்பட்ட மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக கட்டடம் திறக்கப்பட்டடு உள்ளது.
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தனர்.
12 மாடிகள், கண்ணாடி சுவர்களுடன் பிரம்மாண்டமான சென்னை மெட்ரோ ரயில் தலைமையக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 6 மாடிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும், 6 மாடிகள் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு வாடகைக்கு விடப்பட உள்ளன.
Advertisement
Advertisement
பிரம்மாண்ட கட்டடத்தின் அருகிலேயே மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுக்கான குடியிருப்பும் உள்ளது.
இதையும் படிக்க: சமந்தாவின் ‘யசோதா’ டிரைலர் வெளியீடு
பிரம்மாண்ட கட்டடம் முன்பு சுரங்கம் தோண்டும் எந்திரம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. நுவைவு வாயிலில் கிணறு தத்ரூபமாக அமைக்கப்பட்டு, பெண்கள் நீர் இறைத்து குடங்களில் எடுத்து செல்வது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.