கிராம சபைக் கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம்!
தஞ்சை பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தஞ்சை பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுதந்திர நாளையொட்டி இன்று தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
இதையும் படிக்க | பிரிவினைவாதத்தைப் போக்க இந்நாளில் உறுதிமொழி ஏற்போம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட்
கூட்டத்தில் 'ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் திறனை பாதிக்கக்கூடிய வகையில் அமையப்பெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்ய எடுக்கின்ற அனைத்து நிலைபாடுகளையும் ஆளுநர் புறக்கணிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்தும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.