FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கிராம சபைக் கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம்!

தஞ்சை பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Updated On : 15 ஆகஸ்ட் 2023, 2:32 pm IST
பகிர்:

தஞ்சை பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சுதந்திர நாளையொட்டி இன்று தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் 'ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் திறனை பாதிக்கக்கூடிய வகையில் அமையப்பெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்ய எடுக்கின்ற அனைத்து நிலைபாடுகளையும் ஆளுநர் புறக்கணிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது' என ஆளுநரின் செயல்பாட்டை எதிர்த்தும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments