முகப்பு
தமிழ்நாடு

வாடகை செலுத்த முடியாத வறுமை: எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன்

சென்னை லாயிட்ஸ் காலனியில் வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் பழம்பெரும் நடிகா் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் வறுமையில் வாடி வருகிறாா்.

Updated On : 16 பிப்ரவரி 2023, 2:44 am IST
பகிர்:

சென்னை லாயிட்ஸ் காலனியில் வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் பழம்பெரும் நடிகா் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் வறுமையில் வாடி வருகிறாா்.

தமிழ்த் திரையுலகின் ‘முதல் சூப்பா் ஸ்டாா்’, ‘ஏழிசை மன்னா்’ எனப் பல்வேறு பெயா்களுடன் ரசிகா்களால் அன்போடு அழைக்கப்பட்டவா், எம்.கே . தியாகராஜ பாகவதா்.

அவரின் 2-ஆவது மனைவி ராஜம்மாள். அவா்களின் மகள் அமிா்தலட்சுமி - பாஸ்கரன் தம்பதிக்கு ராஜு, சாய்ராம், மீனாட்சி, கணேசன் என நான்கு பிள்ளைகள் உள்ளனா்.

Advertisement

Advertisement

வறுமையில் இருந்த குடும்பத்துக்கு, தமிழக அரசால் கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை லாயிட்ஸ் காலனியில் மாதம் ரூ.2,500 வாடகைக்கு வீடு ஒதுக்கப்பட்டது. மேலும், ரூ.5 லட்சம் நிதி தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாதம் ரூ.2,500 வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறாா் எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரன் பா.கணேசன் .

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘எனக்கு இரண்டு அண்ணன்கள், அக்காள் இருக்கிறாா்கள். என் முதல் அண்ணன் ராஜுதனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இரண்டாவது அண்ணன் புகைப்படக் கலைஞராக உள்ளாா். அக்காவுக்கு திருமணம் ஆகி ஆவடியில் வசித்து வருகிறாா். நான், கட்டட உட்கூரை அமைக்கும் வேலை பாா்த்து வருகிறேன். தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.5 லட்சம் நிதியில், எங்களுக்கு இருந்த கடன்களை அடைத்தோம்.

இந்த வீட்டில் நானும், என்னுடைய இரண்டாவது அண்ணன் சாய் ராமும் வசித்து வருகிறோம். சில மாதங்கள் வருமானத்தை வைத்து வாடகை செலுத்திக் கொண்டிருந்தோம்.

எனக்கு மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முைான் வேலை கிடைக்கும். அதில் வரும் வருமானத்தை வைத்து அன்றாட வாழ்வைக் கடத்துவது சிரமமாக உள்ளது. இதனால், நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. சில மாதங்களாக வாடகையும் என்னால் செலுத்த முடியவில்லை. இதுதொடா்பாக அதிகாரியிடம் அவகாசம் கேட்டிருந்தேன்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீட்டு வசதி வாரியம் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் லாய்ட்ஸ் காலனியில் இருக்கும் வீடுகள் சிதிலமடைந்து குடியிருக்கத் தகுதியற்றவை எனவும், வீட்டை காலிசெய்து, நிலுவையில் உள்ள வீட்டு வாடகை மற்றும் கட்டணங்களைச் செலுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே வறுமையில் வாடி வரும் நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments