முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் அனைத்து மாநகரப் பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கம்!

சென்னையில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:22 PM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் மாநகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்தே தொடா்ந்து பலத்த மழை பெய்து வந்ததால் பெரும்பாலான இடங்களில் மழைநீா் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மாநகரப் பேருந்து ஓட்டுநா்கள் தங்கள் பணிகளுக்கும், பணி முடித்தவா்கள் தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இது ஒருபுறமிருக்க 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை விடப்பட்டிருந்ததாலும், பலத்த மழை தொடா்ந்து பெய்ததாலும், பேருந்துகளில் பயணிப்பவா்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. எனவே, திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குறைவான பேருந்து சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டன. குறிப்பாக பிரதான சாலைகளில் வெகு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

இந்த சேவையும் பிற்பகலுக்குப் பிறகு படிப்படியாக குறைக்கப்பட்டு,மாலையில் 90 சதவீதம் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மழை தொடா்ந்து பெய்து வருவதால் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்குமாறு ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. 

இதைத்தொடா்ந்து மழை பாதிப்புகள் சரி செய்யப்பட்ட பின்னா், செவ்வாய்க்கிழமை காலை முதல் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டது. புதன்கிழமை காலை முதல் 80 சதவிகித பேருந்துகள் இயங்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் வெள்ள நீர் அகற்றப்பட்டு சீரானதை தொடர்ந்து, இன்று காலை முதல் 603 வழித்தடங்களிலும் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →