முகப்பு
தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து: 4 பேர் பலி

நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
கோப்புப்படம்
பகிர்:


கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆடல், பாடல் குழுவினர் திருச்செந்தூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கன்னியாகுமாரிக்கு காரில் திரும்பியபோது நாகர்கோவில் அருகே வெள்ளமடம் பகுதியில் எதிரே வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த 12 பேரில் ஓட்டுநர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேய பலியாகினர். 9 பேர் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.