முகப்பு
தமிழ்நாடு

பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்றத்தில் முறையீடு

தமிழகத்தில் சுதந்திர தினத்தன்று பைக் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக முறையீடு.

Updated On : 13 ஆகஸ்ட், 2024 at 6:21 AM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

தமிழகத்தில் இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக முறையீடு செய்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் வருகிற ஆக. 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்டத் தலைநகரங்களில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்படும் என தமிழக பாஜக அறிவித்திருந்தது.

ஆனால், பைக் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக முறையீடு செய்துள்ளது.

பாஜகவின் முறையீட்டை ஏற்று, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் பிற்பகல் 2.15 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →