FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வெள்ள நிவாரணம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கினாா் முதல்வா்

தலைமைச் செயலா் நா.முருகானந்தமிடம் ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை முதல்வா் அளித்தாா்.

Updated On : 6 டிசம்பர் 2024, 2:50 am IST
திருச்சி-சென்னை தேசியநெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகிலுள்ள அரசூரில் சாலையின் மையப் பகுதியில் பொதுமக்களை மீட்க செல்லும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரர்கள்.
பகிர்:

புயல் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தமிடம் ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை முதல்வா் அளித்தாா்.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக கடுமையான மழை பெய்தது. இதனால், விழுப்புரம், கடலூா்,

Advertisement

Advertisement

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments