முகப்பு
தமிழ்நாடு

மகாவிஷ்ணுவின் சர்ச்சை விடியோ யூடியூபில் இருந்து நீக்கம்!

சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக் கருத்துகளை பேசிய விவகாரம்...

Updated On : 9 செப்டம்பர் 2024, 10:45 am IST
மகா விஷ்ணு (கோப்புப்படம்) - DIN
பகிர்:

மூடநம்பிக்கை கருத்துகளை பரப்பி, மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய மகாவிஷ்ணுவின் விடியோவை யூடியூபில் இருந்து பரம்பொருள் அறக்கட்டளை நீக்கியுள்ளது.

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளி விழாவில் பங்கேற்ற மகாவிஷ்ணு, முன்ஜென்ம பாவங்கள் காரணமாகவே தற்போது குறைகளுடன் பிறக்கிறார்கள் உள்பட பல்வேறு மூடநம்பிக்கை கருத்துகளை மாணவர்கள் முன்னிலையில் பேசினார்.

இவரின் பேசும்போதே அந்த பள்ளியின் மாற்றுத்திறன் ஆசிரியர் சங்கர், பள்ளிகளில் இதுபோன்று பேசக் கூடாது என்று வாதிட்டார்.

Advertisement

Advertisement

மகாவிஷ்ணு கைது

மகாவிஷ்ணு பேசிய விடியோக்கள் இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்ற நிலையில், சென்னை அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கரை பாராட்டிய அமைச்சர், மூடநம்பிக்கை கருத்தையும், மாற்றுத்திறன் ஆசிரியரை அவதூறாக பேசியதற்கும் மகாவிஷ்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த நிலையில், வெளிநாடு சென்றிருந்த மகாவிஷ்ணு கடந்த சனிக்கிழமை நாடு திரும்பியவுடன் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மகாவிஷ்ணு மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.