தமிழ்நாடு

ஊழலை மறைக்கும் திமுகவின் ஆயுதங்கள்: அமித் ஷா குற்றச்சாட்டு

திமுக அரசு ஊழல்களை மறைத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

DIN

திமுக அரசு ஊழல்களை மறைத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நியமனம் மற்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, தனியார் விடுதியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமித் ஷா, திமுக மீதான குற்றச்சாட்டையும் பகிர்ந்தார். திமுக குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் மின்சாரம், டாஸ்மாக், போக்குவரத்து என பல துறைகளில் ஊழல் இருக்கிறது. இதை மறைக்கவே திமுக நீட் விவகாரத்தை கையில் எடுத்து பயன்படுத்துகிறது.

பல்வேறு ஊழல்களுக்கு திமுக தேர்தலில் பதிலளிக்க வேண்டும். மும்மொழிக்கொள்கை பிரச்னையையும் ஊழலை மறைக்கவே திமுக கையில் எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக, தமிழக பாஜக தலைவர் தேர்தலில் நயினார் நாகேந்திரன் தேர்வானதாக அமித் ஷா அறிவித்தார். முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறினார்.

தொடர்ந்து, அதிமுகவுடன் இணைந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், யார்யாருக்கு எவ்வளவு தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும், ஆட்சியமைப்பது குறித்து தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.90,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை!

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

அழகாகப் பூத்தது டாட்டூ... ப்ரியா பிரகாஷ் வாரியர்!

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT