FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரம்: ஆன்லைன் மோசடியில் ரூ.66 லட்சத்தை இழந்த ஆசிரியை

மகாராஷ்டிரத்தில் ஆன்லைன் மோசடியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ரூ.66 லட்சத்தை இழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 11 ஏப்ரல் 2025, 6:26 pm IST
ஆன்லைன் - கோப்புப்படம்.
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ஆன்லைன் மோசடியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் ரூ.66 லட்சத்தை இழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுனிதா சௌத்ரி(54). இவரிடம் சமூக ஊடகங்கள் மூலம் நட்பான நபர், வலைத்தளம் ஒன்றில் முதலீடு செய்தால் அதிக வருமான ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

இதனை நம்பிய ஆசிரியை சுனிதா சுமார் 50 நாள்களில் அதில் ரூ.66 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார்.

Advertisement

Advertisement

பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் முதலீட்டையும் அதனுடைய லாபத்தையும் அந்த நபரிடம் ஆசிரியை கேட்டுள்ளார்.

இபிஎஸ் இல்லத்தில் அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து!

ஆசிரியை சுனிதா பணம் கேட்கத் தொடங்கியதும் அந்த நபர் இரண்டு மொபைல் போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். இதுதொடர்பாக ஆசிரியை கோல்சேவாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து மோசடி நபரின் ஐபி முகவரி, மொபைல் இருப்பிடங்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை தடயங்களைக் கண்டறியும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments