போலி சாலை விபத்துகள்! பணம் பறிக்கும் கும்பல்! சென்னை மக்களே எச்சரிக்கை!
போலியான சாலை விபத்துகளை ஏற்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் குறித்து சென்னை மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
போலியான சாலை விபத்துகளை ஏற்படுத்தி, வாகனத்தை ஓட்டி வருபவர்களிடமிருந்து பணம் பறிக்கும் கும்பல்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
டிச.7ஆம் தேதி, புழல் பகுதியைச் சேர்ந்த விஜய் ரவி என்பவரிடம், வியாசர்பாடி மேம்பாலம் அருகே, ஒரு பெண் உள்பட 6 பேர் கொண்ட கும்பல், போலியான விபத்தை ஏற்படுத்தி, அவரிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.