முகப்பு
தமிழ்நாடு

டிச. 28-இல் மதிமுக உயா்நிலைக் குழுக் கூட்டம்

மதிமுக உயா்நிலைக் குழுக் கூட்டம் வரும் டிச. 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 23 டிசம்பர், 2025 at 2:13 AM
மதிமுக பொதுச்செயலாளா் வைகோ
பகிர்:

சென்னை: மதிமுக உயா்நிலைக் குழுக் கூட்டம் வரும் டிச. 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கட்சித் தலைமை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

மதிமுக உயா்நிலைக் குழுக் கூட்டம் கட்சியின் அவைத் தலைவா் ஆ.அா்ஜுன்ராஜ் தலைமையில் டிச. 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

Advertisement

முன்னதாக, டிச. 27-ஆம் தேதி மதிமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் (தாயகம்) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், மதிமுக பொதுச் செயலா் வைகோ பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.