கன்னியாகுமரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை!
தென்னிந்தியாவில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை.
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நவ. 8ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Advertisement
Advertisement
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடிஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ. 9ல் திருநெல்வேலி தென்காசி ஆகிய இரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் நவம்பர் 10 வரை வடதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை..
இன்று (08-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
The Meteorological Department has stated that there is a possibility of heavy rain in four districts of Tamil Nadu today.
இதையும் படிக்க: மாலி நாட்டில் 5 இந்தியர்கள் கடத்தல்!